close
Choose your channels

இனிமேல் சமந்தாவுக்கு டப்பிங் இல்லை: சின்மயி

Tuesday, September 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தாவின் பெரும்பாலான தெலுங்கு திரைப் படங்களுக்கு டப்பிங் கொடுத்துவந்த பாடகி சின்மயி இனி சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் பாடகியாக மட்டுமின்றி பின்னணி குரல் கொடுப்பவராகவும் சின்மயி இருந்து வருகிறார் என்பதும் அவர் தமிழின் முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா உள்பட பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தற்போது தெலுங்கில் தானே சொந்தமாக டப்பிங் செய்து வருகிறார். எனவே இனி சமந்தாவுக்கு டப்பிங் குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடியும் காலம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன் என்றும் என்னுடைய மிகச் சிறந்த தொழியான சமந்தா தனது படங்களுக்கு அவரே டப்பிங் பேசி வருவதால் அவருக்கு பின்னணி பேசும் வாய்ப்பு எனக்கு இனி கிடைக்காது என்றே நினைக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos