close
Choose your channels

வருவாய் கலம் ஏற ஆயிரம் வேழம் போல': ஷங்கர் மகாதேவன் சித்ரா குரலில்  'PS 2' பாடல்..!

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் வெளியான டிரைலர் இணையதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ’வீரா ராஜ வீர’ என்று தொடங்கும் பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை ஷங்கர் மகாதேவன், சித்ரா மற்றும் ஹரிணி பாடியுள்ளனர் என்பதும் இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

காணீரோ நீர் காண் சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரோ

ஓ அழகிய பூவே செல்லுதியோ மலரிடு போ சகி

வீர ராஜ வீர சூரா தீர சூர வீழா சோழ வீர

சீரார் ஞானம் வாழ வாராய் வாகை சூட

தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர

மாறா காதல் மார பூவோர் ஏங்கும் தீர

பாவோர் போற்றும் வீர உடைவாள் அரை தாங்க

பருதோள் புவி தாங்க வளவா எமை ஆள

வருவாய் கலம் ஏற ஆயிரம் வேழம் போல

போர்க்களம் சேரும் சோழ வேந்தா ராஜ ராஜ

வாராய் வாகை சூட வீரா ராஜ வீர..
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.