close
Choose your channels

உதவியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்த பி.ஆர்.ஓ

Thursday, December 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது திரையுலகினர் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருந்து வைத்து பரிசு கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வரவுள்ள நிலையில் கோலிவுட்டின் முன்னணி பி.ஆர்.ஓ ஜான்சன் அவர்கள் தனது உதவியாளர்களுக்கு விருந்து வைத்தார். 

இந்த விருந்தில் பிஆர்.ஓ ஜான்சன் அவர்களின்  தற்போதைய உதவியாளர்கள் மட்டுமின்றி அவரிடம் ஏற்கனவே உதவியாளர்களாக பணிபுரிந்து தற்போது பி.ஆர்.ஓ வாக பணிபுரிந்து வருபவர்களும் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓவாக உயர்ந்தபோதிலும் தங்கள் குருநாதரிடம் அடிக்கடி தொடர்பில் இருந்த அவர்கள் இன்று அவர் வைத்த விருந்தில் கலந்து கொண்டு தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த விருந்து ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக மட்டுமின்றி மீண்டும் தன்னுடைய குருநாதர் மற்றும் சக ஊழியர்களை சந்திக்கும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும் விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட சக்தி சரவணன் தனது சமூக வலைத்தளத்தில் ’உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும் விட மிகப் பெரியது. என் குருநாதர் திரு. ஜான்சன் சார் அவர்கள் இன்று தனது உதவியாளர்களை அழைத்து அன்பையும் பாசத்தையும் காட்டி விருந்தோம்பல் கொடுத்தார்... சார் உங்களிடம் பணிபுரிந்தது நான் பெருமையாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுபோன்ற பண்டிகை விருந்துகளில் தான் குரு-சிஷ்யன் உறவு மேலும் வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.