close
Choose your channels

மேனேஜர் மோசடியில் உண்மையில் நடந்தது என்ன? ராஷ்மிகா மந்தனாவின் அறிக்கை..!

Friday, June 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் இதையடுத்து அவரை நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்து ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜராக இருந்தவர் அவரது 80 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் இதனை அடுத்து ராஷ்மிகா அவரை நீக்கிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாக தன்னிடம் மேனேஜராக இருந்த ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் ’எனக்கும் என்னுடைய மேனேஜருக்கும் எந்த விதமான மோதலும் இல்லை, நாங்கள் சமூகமாகத்தான் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டோம். இனி நாங்கள் இருவரும் அவரவர் வேலையை சுதந்திரமாக செய்ய முடிவெடுத்து உள்ளோம். எங்கள் பிரிவை பற்றி இணையத்தில் பரவி வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.