close
Choose your channels

'நான் எதை செய்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டுதான் செய்வேன்': ராஷ்மிகா மந்தனா

Thursday, February 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ராஷ்மிகா மந்தனா ’நான் எதை செய்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன்’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியை மறுத்த விஜய் தேவரகொண்டா ’எனக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ஊடகங்கள் திருமணம் செய்து வைக்கின்றன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ராஷ்மிகா, ‘என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் கிடையாது, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் ஒரு நபராக அவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.