close
Choose your channels

'தலைவர் நிரந்தரம்'.. ஹெலிகாப்டர் முன் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரபல இயக்குனர்..!

Thursday, May 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஹெலிகாப்டர் முன் பிரபல இயக்குனர் ஒருவர் எடுத்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

மலையாள திரையுலகில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆர்டிஎக்ஸ்’ ’ராபர்ட் டோனி சேவியர்’ என்ற டைட்டிலில் வெளியான இந்த படம் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 84 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஹெலிகாப்டர் இருக்கும் நிலையில் இந்த படம் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்தது என்று கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஒரு புகைப்படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் அவர் ’உங்கள் கனவுகளை ஒருநாள் பிரபஞ்சம் நிறைவேறும் தருணம்’ என்று கூறி ’தலைவர் நிரந்தரம்’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ’ஆர்டிஎக்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்பட ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.