close
Choose your channels

நல்ல வேளை தப்பிச்சேன்? பழைய காதல் குறித்து சமந்தா அதிர்ச்சி தகவல்

Monday, June 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன் நிகழ்ந்த காதல் குறித்தும், அந்த அபாயத்தில் இருந்து தான் நல்லவேளையாக தப்பித்ததும் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியபோது, 'சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் நடிக்கும்போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். ஆனால் நல்ல வேளையாக அந்த நபரிடம் இருந்து நான் தப்பித்துவிட்டேன். இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம் தான் நான் நாகசைதன்யாவை சந்தித்தது என்று கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமந்தா குறிப்பிட்ட அந்த நடிகர் யாரென்பதுதான் தற்போது வலைத்தளங்களின் முக்கிய விவாதமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.