close
Choose your channels

'அரபிக்குத்து' பாடலுக்காக அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்ட சம்யுக்தா ஹெக்டே: வைரல் வீடியோ!

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மன்மத லீலை’ நாயகி சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்காக நடிகர் அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் உருவான ’மன்மத லீலை’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனின்போது ’அரபுக்குத்து’ பாடலுக்கு நடனமாட அசோக் செல்வனை அழைத்ததாகவும் முதலில் மறுத்த அசோக் செல்வன் அதன் பிறகு ஐந்து விநாடிகள் மட்டும் நடனம் ஆடியதாகவும் கூறியுள்ளார் .

மேலும் இந்த வீடியொவை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்காக கண்டிப்பாக அசோக் செல்வன் கோபப்படுவார் என்றும் ஆனால் மன்மதலீலை வெற்றியில் அந்த கோபத்தை அவர் மறந்து விடுவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அசோக் செல்வனிடம் தான் அட்வான்ஸாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் அந்த வீடியோவில் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.