close
Choose your channels

கேரளாவுக்காக மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்த விஷால்

Saturday, August 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியும், நிலச்சரிவால் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது

கேரள மக்களின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதிவழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கேரள வெள்ள நிதியாக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் விஷால் நேற்று தனது 'சண்டக்கோழி 2' குழுவினர்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று கேரள மக்களுக்காக வழிபாடு செய்தார். இந்த வழிபாட்டில் 'சண்டக்கோழி 2' இயக்குனர் லிங்குசாமி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.