close
Choose your channels

'ரெமோ' இசையில் மேலும் ஒரு புதுமை. அனிருத் இசையில் பாடிய பிரபலம்

Sunday, August 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் முதல்முறையாக இன்னொரு முன்னணி இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடியுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆம், 'கபாலி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், 'ரெமோ' படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். 'டாவுயா' என்று தொடங்கும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளதால் 'ரெமோ' ஆல்பத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதன்முதலாக இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்த பாடலை வரும் 5ஆம் தேதி அனைவரும் ரசித்து கேட்கலாம்.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.