close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சரத்குமார் குறித்த மகிழ்ச்சியான செய்தி: வரலட்சுமி டுவீட்!

Sunday, December 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் குறித்த மகிழ்ச்சியான செய்தி செய்தி ஒன்றை அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல நடிகர் சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை சரத்குமாரின் மனைவி ராதிகாவும் மகள் வரலட்சுமியின் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் காரணமாக தற்போது அவர் குணம் ஆகி விட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் சரத்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது/ சரத்குமார் கொரோனாவால் இருந்து குணமாகி விட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.