close
Choose your channels

உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன்: சரவணன் விக்ரம்

Saturday, December 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் விக்ரம் சமீபத்தில் எவிக்ட்டான நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.

குறிப்பாக விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் உண்மையானவர்கள் கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனாவிடம் எனக்கு நல்ல நட்பு கிடைத்த போது வெளியே வந்து விட்டேன் என்றும் கூறினார்.

நான் உள்ளே இருந்தபோது ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன், அவர்கள் குறித்து சரியான புரிதல் எனக்கு இல்லை என்று கூறிய சரவணன் விக்ரம், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வெளியே வந்த பின்னர் அதை தெளிவு படுத்திக் கொண்டு இன்னும் விரிவாக பேசுகிறேன் என்று கூறினார்.

விஜய் வர்மா, விசித்ரா ஆகிய இருவரும் பலமான போட்டியாளர்கள் தினேஷ், மணி, அர்ச்சனா, விஜய் ஆகியோர் கடைசி வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூவரில் ஒருவர் கண்டிப்பாக முதல் ஐந்து இடங்களை பிடிப்பார்கள் என்று கூறிய சரவணன் விக்ரம், டைட்டில் வின்னர் நான் தான் என்று இரவு நேரத்தில் பேசிய விஷயங்கள் தொலைக்காட்சியில் வராது என்று நினைத்தேன், ஹரிஷ் கல்யாண் வந்து சென்ற பின்னர் தான் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொண்டேன், ட்ரோலாக மாறியதும் எனக்கு புரிய வந்தது என்றும் தெரிவித்தார். நான் மட்டுமல்ல அனைவருமே டைட்டில் வின்னர் என்ற இலக்கை நோக்கி தான் நிகழ்ச்சியில் பயணிக்க ஆரம்பித்தோம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் எல்லோரும் என்னை சரவணன் விக்ரம் என்று அழைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது திரைப்பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.