close
Choose your channels

சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் செல்வராகவன் மனைவி: வைரல் புகைப்படம்!

Tuesday, March 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்ததாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது குழந்தை ரிஷிகேஷ் உடன் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

எனுடைய லிட்டில் பிரின்ஸ் ரிஷிகேஷ் என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.