close
Choose your channels

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்.... சித்ரா குறித்து சக நடிகையின் உருக்கமான பதிவு!

Wednesday, December 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சித்ரா இறந்துவிட்டார் என்பதை இன்னும் நம்ப முடியாமல் அவருடன் நடித்த சக நடிகர் நடிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் மறைவு குறித்து அவருடன் நெருக்கமாக பழகிய, நடித்த பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சித்ராவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரும் நடிகையுமான ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, ‘நான் உன்னை இந்த வழியில் இழந்து விடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. கடைசியாக நான் உன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது உன்னுடைய வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முடிவு குறித்து உன்னை சமாதானப்படுத்தினேன். ஒவ்வொரு நொடியிலும் நான் உன்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதை நீ ஏற்க தயாராக இல்லை.

ஒருவேளை இவ்வாறு நடக்கும் என்று எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் நான் அந்த முயற்சியை மேலும் செய்திருப்பேன். இப்போது நான் உன்னை இழந்து விட்டேன். என் இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டது என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் இருந்து சித்ராவுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து அவர் ஷாலு ஷம்முவுடன் பேசியிருக்கின்றார் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.