close
Choose your channels

புலி, வேதாளம் படங்களை அடுத்து S3' படத்தில் ஸ்ருதி பாடுகிறாரா?

Tuesday, March 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் ஜொலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் சொல்லபோனால் அவர் திரையுலகில் அறிமுகமானதே ஒரு பாடகியாகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடித்த அஜித்தின் 'வேதாளம்' மற்றும் விஜய்யின் 'புலி' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடியிருந்தார். அதுபோலவே சூர்யாவுடன் அவர் தற்போது நடித்து வரும் 'S3' படத்திலும் அவர் ஒரு பாடலை பாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், 'S3'படத்தில் தான் எந்த பாடலையும் பாடவில்லை என்றும், தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் பாட வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் 'S3'படம் போலீஸ் கதை என்றபோதிலும் தான் போலீஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் இருப்பினும் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு கேரக்டரில்தான் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.