close
Choose your channels

மறப்போமா.. மறப்போமா.. கணவரை இழந்தபின் நிம்மதியை தேடி காட்டுக்குள் செல்லும் சீரியல் நடிகை..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியல் நடிகை சுருதி சண்முகப்பிரியாவின் கணவர் சமீபத்தில் மறைந்த நிலையில் அந்தத் துக்கத்தை மறப்பதற்காக கணவருடன் அவர் சென்ற இடத்திற்கு மீண்டும் சென்று தன்னை அந்த துக்கத்திலிருந்து வெளிவர தயார் படுத்தி வருகிறார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நாதஸ்வரம், மெட்டி ஒலி, வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக சமீபத்தில் காலமானார்.

இந்த நிலையில் கணவரின் இழப்பால் பெரும் துயரத்தில் இருக்கும் அவர் தற்போது கணவருடன் சென்ற இடங்களுக்கு மீண்டும் சென்று தன்னை அந்த துக்கத்திலிருந்து வெளிவர தயார்படுத்தி வருகிறார்.

குறிப்பாக காட்டுக்குள் கணவர் கணவருடன் சென்ற இடங்களுக்கு மீண்டும் சென்று அவர் புகைப்படங்களை எடுக்கும் வீடியோவை பதிவு செய்தல் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் ‘மறப்போமா மறப்போமா’ என்ற ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற பாடலையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’வலிமையான பெண், விரைவில் துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.