close
Choose your channels

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்தது

Wednesday, September 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாய்கள் ஜாக்கிரதை' வெற்றி படத்தை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'ஜாக்சன் துரை' படத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்துமாதவி, நான் கடவுள்' ராஜேந்திரன் கருணாகரன் உள்பட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தில் சிபிராஜ் மீண்டும் போலீஸ் வேடத்திலும் சத்யராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பேய்களாகவும் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் விபின் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை பேய்ப்படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சிபிராஜ், ஜீவாவுடன் 'போக்கிரி ராஜா' படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.