close
Choose your channels

சிம்புவின் 'AAA' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

Sunday, September 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை அதாவது செப்டம்பர் 26 முதல் தொடங்கவுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் நாயகி தமன்னா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் நிலையில் முதல் கேரக்டரான மதுரை மைக்கேல் குறித்த காட்சிகள் நாயகி ஸ்ரேயாவுடன் கடந்த மாதம் திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் 2வது கேரக்டர் அஸ்வின் தாதா என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கேரக்டரின் படப்பிடிப்பு நாளை முதல் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.