close
Choose your channels

6வது முறையாக இணையும் சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான்.. மேலும் சில மாஸ் தகவல்கள்..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ஐந்து திரைப்படங்களுக்கு இதுவரை ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக சிம்பு மற்றும் ஏஆர் ரஹ்மான் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சிம்பு நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ’அச்சம் என்பது மடமையடா’ ’செக்கச் சிவந்த வானம்’ ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய ஐந்து படங்களுக்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க நடிப்பதாகவும் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுதான் என்றும் அவர் தனது இரண்டு வித்தியாசமான வேடங்களுக்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.