close
Choose your channels

சென்னை திரும்பிய 'எஸ்கே 21' படக்குழு.. சாய்பல்லவியுடன் அடுத்தகட்ட படப்பிடிப்பு..!

Sunday, August 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

போர் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரு போர்க்காட்சியை உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்த காட்சி தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய படக்குழு அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும், இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை படப்பிடிப்பை முடித்த உடன் மீண்டும் படக்குழு காஷ்மீர் செல்ல இருப்பதாகவும், அப்போது தான் போர்க் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் என்றும் மாவீரன் வெற்றியை அடுத்து இந்த படம் மேலும் ஒரு வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்றுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.