close
Choose your channels

திருமணம் ஆன ஒரே மாதத்திற்குள் தாலியை கழட்டிய நடிகை சோனம் கபூர்

Tuesday, May 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கும் ஆனந்த் அஹுஜாவிற்கும் மே 12-ஆம் தேதி ஜெனிவாவில் திருமணம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சோனம்கபூர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அவர் நேற்று முதல் தான் நடித்து வந்த 'வீர் தி வெட்டிங்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு வந்த சோனம்கபூரின் கழுத்தில் தாலி இல்லாததை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் தனது தாலியை பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்திருந்தது பின்னர் தெரியவந்தது.

தாலியை பிரேஸ்லெட்டாக மாற்றி சோனம் கபூர் அணிந்த இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சோனம்கபூரின் இந்த செய்கைக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமான தாலி நெஞ்சின் அருகில் இருப்பதுதான் சரி என்றும், பேஷன் என்ற வகையில் அதனை கையில் மாட்டிக்கொள்வது கலாச்சாரத்தை அவமதிப்பது போன்றது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தாலியை கையில் மாட்டிக்கொள்ள அவரது கணவரே சம்மதம் தெரிவித்துள்ளதால் இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்று ஒருசில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.