close
Choose your channels

விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கு: சூரியின் திடீர் கோரிக்கை!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சூரியிடம் ரூபாய் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது திடீரென சூரியின் தரப்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் கொடவாலா என்பவர் தன்னிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக சூரியின் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை முன்ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது திடீரென விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் கொடவாலா தனது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தயாரிப்பாளர் அன்புராஜன் முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் சூரியின் தரப்பில் இருந்து திடீரென ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தால் போதும் என்றும் விஷ்ணு விஷால் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது நோக்கமல்ல என்றும் சூரியின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.