close
Choose your channels

தயாரிப்பாளர் என்னை ஹோட்டலில் தங்கச் சொன்னார்? மோசமான சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகை!

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா துறையில் ஏற்கனவே காஸ்டிங் கவுச் பிரச்சனையை சில இளம் நடிகைகள் சந்தித்து வருவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்த பிரச்சனை ‘மீடூ’ சந்தர்ப்பத்தின்போது மேலும் பூதாகரமாக வெடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1994 இல் நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘கபி ஹான் கபி நா’ திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர் பாலிவுட்டில் ‘ஜஸ்பாத்‘, ‘வாடே இராதே, ‘மை வைஃப்ஸ் மர்டர்‘, ‘ரன்‘, ‘கர்மா அவுர் ஹோலி‘, ‘ஆக்‘, ‘ரோமியோ அக்பர் வால்டர்‘ எனப் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, அப்போதெல்லாம் ஹோட்டல் அறைகளில்தான் சினிமா சம்பந்தப்பட்ட சந்திப்புகள் அடிக்கடி நடக்கும். இது பொதுவானதாகவே இருந்து வந்தது. அப்படி ஒருமுறை நான் படவாய்ப்பு ஒன்றிற்காக தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் நீ யாருடன் மிகவும் நெருக்கமாக இருப்பாய்? அம்மாவா? அல்லது அப்பாவா? என்று கேள்வி கேட்டார். நான் அதற்கு எனது அப்பாவுடன் தான் அதிக பாசமாக இருப்பேன் எனத் தெரிவித்தேன்.

அதைத் தொடர்ந்து பேசிய அந்த தயாரிப்பாளர் நல்லது, உடனே உனது அப்பாவை தொடர்பு கொண்டு நாளை காலை நான் உனது வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவதாகச் சொல்விடு எனக் கூறினார். இதனால் திடுக்கிட்டு நின்ற நான் அந்த நிலைமையை புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் ஆயிற்று. கிட்டத்தட்ட எனது கண்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஒருவழியாக சுதாரித்துக் கொண்ட நான் எனது பொருட்களை எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், சினிமா துறையில் இது நிறைய நடக்கும். ஆனால் திரையுலகம் தற்போது நிறைய மாறிவிட்டது. முன்பைவிட சிறப்பாக இருக்கிறது. ஒழுங்கமைப்பட்டதாகவும் ஒழுக்கத்துடனும் இருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் இதுபோன்ற விஷயங்களை ஒரே டிவிட்டில் அம்பலப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்.

நடிகையும் பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் சேகர் கபூரை மணந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது ஆரம்பக் காலகட்டத்தில் நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் அது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.