close
Choose your channels

நான்கு நாடுகளில் படமாகிறது 'சிங்கம் 3'

Saturday, September 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் சூர்யா நடித்து வரும் மற்றொரு படமான '24' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சிங்கம் 3' படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் நான்கு நாடுகளில் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியவில் காரைக்குடி மற்றும் ஆந்திராவில் ஒருசில காட்சிகளுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பின்னர் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவிலும், கிளைமாக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பாடல்கள் காட்சிகள் ஆப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.