close
Choose your channels

ஒரே மேடையில் சூர்யா-சிம்பு சாத்தியமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே மேடையில் சூர்யா மற்றும் சிம்பு தோன்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் இது சாத்தியப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் உருவான ’பத்துதல’ என்ற திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என்றும் நாளை அனேகமாக இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’பத்துதல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் கடைசி வாரத்தில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான சிம்பு ரசிகர்கள் அழைப்பு விடுக்கப்படுவார்கள் என்றும் ஒரு மிகப்பெரிய மாநாடு போன்று இந்த விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும் அனேகமாக அந்த சிறப்பு விருந்தினர் நடிகர் சூர்யாவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தில் தற்போது சூர்யா நடித்து கொண்டிருப்பதால் அவரது இன்னொரு தயாரிப்பு திரைப்படமான ’பத்துதல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ’பத்துதல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா மற்றும் சிம்பு ஒரே மேடையில் தோன்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.