close
Choose your channels

மாவீரன் கிட்டு' உருவாக காரணம் என்ன? சுசீந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

Wednesday, November 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் உருவாக என்ன காரணம் என்பதை சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, 'சார் ஒரு தமிழனா நாங்க எல்லாம் பெருமைபடுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க' என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.
மாவீரன் கிட்டு' இந்திய சினிமாவில் மிகவும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
'மாவீரன் கிட்டு' படத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.