close
Choose your channels

மத போதகராக மாறிய தமிழ் நடிகை!

Thursday, August 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’ஈரமான ரோஜாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மோகினி. அதன் பின்னர் இவர் ’நாடோடி பாட்டுக்காரன்’ ’சின்ன மருமகள்’ ’உடன்பிறப்பு’ ’புதிய மன்னர்கள்’ ’ஜமீன் கோட்டை’ ’தாயகம்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் ஒரு சில மலையாளம் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் நடிகை மோகினி. இவருக்கு அனிருத் மற்றும் அத்வைத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மோகினி திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’என்னுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு சில நிகழ்வுகளால் நான் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். தற்கொலை எண்ணம் கூட வந்தது. இதற்கு எந்த மருத்துவர்களும் தீர்வு கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் கிருஸ்தவ மத போதனைகளில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு நிம்மதி கிடைத்தது. இதனை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். கிறிஸ்துவ மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.