close
Choose your channels

பிரதமர் பதவி கொடுத்தால் இந்தி பேச தயார்: பிரபல நகைச்சுவை நடிகர்!

Sunday, September 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் பதவி கொடுத்தால் தான் இந்தி பேசத் தயார் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி என்பதும் பல திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை காமராஜர் மாளிகையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மயில்சாமி பேசியபோது, ‘மக்களுக்கு மொழி முக்கியமல்ல, உழைப்பு தான் முக்கியம் என்றும், மக்களை ஓட்டுக்காக ஏமாற்றினால், மக்கள் அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் மக்களுக்காக பேச வேண்டுமென்றும் மக்களுக்காக பேசியதால் தான் எம்ஜிஆர் மக்களால் போற்றப்பட்டார் என்றும் மக்களை ஏமாற்றினால் நிச்சயம் அவர்கள் உங்களை தேர்தலின்போது ஏமாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் மக்களுக்கு மொழி முக்கியம் அல்ல என்றும் பிரதமர் பதவி கொடுத்தால் நானும் இந்தி பேச தயார் என்றும் அவர் நகைச்சுவையுடன் கூறினார். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என மூன்று மதங்களையும் நான் பிரித்துப் பார்க்க மாட்டேன் என்றும் மூன்று மதங்களையும் நான் ஒன்றாகவே பார்க்கின்றேன்’ என்றும் மயில்சாமி இந்த விழாவில் பேசினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.