close
Choose your channels

திரையரங்குகளில் மீண்டும் 50% பார்வையாளர்கள்: 'ஆர்.ஆர்.ஆர்.', 'வலிமை' ரிலீஸ் என்ன ஆகும்?

Friday, December 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சற்றுமுன் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் முக்கியமாக திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் திடீரென 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வலிமை ’ஆர்.ஆர்.ஆர்’, ’வலிமை’ படங்களின் ரிலீஸ் தள்ளி போகுமா? அல்லது 50 சதவீத பார்வையாளர்கள் என்ற நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos