close
Choose your channels

இன்றும் தெறிக்கவிட்ட ரசிகர்கள்: நெய்வேலி குலுங்கியது

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை பரபரப்பாக்கிய பெருமை வருமான வரி அலுவலக அதிகாரிகளுக்கே சேரும். அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமின்றி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதை அடுத்து நெய்வேலி குலுங்க தொடங்கியது.

குறிப்பாக பாஜகவினர் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அடுத்த நிமிடத்தில் இருந்தே விஜய் ரசிகர்கல் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே ஆயிரக்கணக்கில் குவிய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களை நோக்கி கையசைத்த விஜய், அவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார் என்பதும், அந்த செல்பி இன்று அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், தன்னை பார்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி வேனில் ஏறி கையைசைத்த விஜய் அவர்களிடம் தனது மகிழ்ச்சியையும் பதிவு செய்து கொண்டார். விஜய்யை பார்க்க கூடிய கூட்டத்தால் அந்த பகுதியே குலுங்கியது என்று கூறினால் அது மிகையாகாது என்ற அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.