close
Choose your channels

தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் தராத கிளைமாக்ஸ்- ஆதிக்

Sunday, September 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'டார்லிங்' வெற்றி படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய முதல் படம் குறித்து ஒருசில விஷயங்களை மனம் திறந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "எனது படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்தது குறித்து எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. நான் 'யூஏ' சர்டிபிகேட்தான் எதிர்பார்த்தேன். ஆனால் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

இந்த படத்தை பொறுத்த வரையில் நான் கொடுக்கும் மெசேஜ் இளைஞர்களிடம் போய் சேரவேண்டிய ஒரு முக்கியமான மெசேஜ். இதனால் 'ஏ' சர்டிபிகேட்டால் இந்த படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு காதல் பிரேக் அப் ஆனால், அதன் பின்னர் அந்த காதலர்கள் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நிலை என்ன என்பதை போல்டாக இந்த படத்தில் தெரிவித்துள்ளேன். தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் கொடுக்காத கிளைமாக்ஸ் இந்த படத்தில் அமைந்துள்ளது என்பதை அடித்து கூறுவேன். முதலில் இந்த படத்தை இந்தியில்தான் இயக்க விரும்பினேன். ஆனால் தமிழில் வாய்ப்பு கிடைத்ததால் இயக்கிவிட்டேன். கண்டிப்பாக இந்த படம் அனைத்து இளைஞர்களும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது' என்று கூறியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படம் குறித்து கூறியதாவது, " 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் டிரைலர் வெளியானதும் பல தயாரிப்பாளர்கள் என்னுடைய அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தனர். ஆனால் அடுத்த படம் கமிட் ஆவதில் நான் அவசரப்படவில்லை. இந்த படம் வெளியானதும் ஆடியன்ஸ் கொடுக்கும் ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டுதான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். என்று கூறுகிறார் ஆதிக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.