close
Choose your channels

தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும் இந்த திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்து சூர்யா தேவி என்ற பெண் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை விசாரணை செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்த சூர்யாதேவி தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனாவை பரப்பும் வகையில் சூர்யா தேவி செயல்படுவதாக அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.