close
Choose your channels

'வாலு' வெளியீட்டை தடுக்கவில்லை. உதயநிதி விளக்கம்

Monday, August 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் 'வாலு' படத்திற்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உதயநிதி ஸ்டாலினே காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 'நான் எந்த நடிகருக்கும் எதிரானவன் கிடையாது. மற்றவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன் மூளையை உபயோகிக்கவும் (அப்படி ஒன்று இருந்தால்) என்று கூறியுள்ளார். மேலும் 'எனது படங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும் என நான் நிச்சயம் நினைப்பேன். ஆனால், அதற்காக அடுத்தவர் படத்தை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்க மாட்டேன்" என்றும் அவர் இன்னொரு டுவீட்டில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிம்புவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கடவுளின் அருளால் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே ரசிகர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.