close
Choose your channels

உலகத்துல நடக்குற ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும்: 'கண்னை நம்பாதே' டிரைலர்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும். சில பேர் செஞ்ச தப்பை மறைப்பதற்காக கொலை செய்வார்கள். இன்னும் சில பேர் இனிமேல் தப்பே நடக்கக்கூடாது என்பதற்காக கொலை செய்வார்கள். ஆனால் நான்... என்ற உதயநிதி ஸ்டாலினின் பின்னணி குரலோடு வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

திரில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா, சதீஷ், மாரிமுத்து, பழ கருப்பையா, சென்றாயன், கு ஞானசம்பந்தம் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய ’கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை மு மாறன் என்பவர் இயக்கியுள்ளார்.

சித்து குமார் இசையில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் உதயநிதி ஸ்டாலினின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.