close
Choose your channels

சிவாஜி சிலை மட்டும்தான் போக்குவரத்துக்கு இடையூறா? வைகோ

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் மே மாதம் 18ஆம் தேதிக்குள் சிவாஜி சிலையை அகற்றி, சிவாஜிக்காக கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
'நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை. அவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற லட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழகத்துக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னை கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.
சென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகத்தின் சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.
இருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கெனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும்.
புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும்' இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.