close
Choose your channels

பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வைஷ்ணவி: ஆனால் திடீர் திருப்பம்

Sunday, July 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது.

பொன்னம்பலம், மகத், யாஷிகா, மும்தாஜ் மற்றும் வைஷ்னவி எவிக்சன் பட்டியலில் இருப்பதால் இவர்களில் ஒருவர் இன்று வெளியேற போகிறார்.

இதுகுறித்து சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'நான் மக்களிடம் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டதாக பொன்னம்பலமும், நான் வெளியே போக மாட்டேன் என்ற நம்பிக்கை இருப்பதாக மகத்தும், இந்த வீட்டில் தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும், வெளியேற விரும்பவில்லை என்று யாஷிகாவும் கூறுகின்றனர். அதன்பின்னர் மும்தாஜ் மற்றும் வைஷ்ணவியை மட்டும் காட்டி ஒருவர் வெளியேற்றப்பட போவதாக கமல் கூறுவதால் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாகவும், ஆனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவை ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைத்தது போல் வைஷ்ணவியையும் ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைக்கப்போவதாகவும் ஒருசில நாட்கள் கழித்து மீண்டும் வைஷ்ணவி பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்வார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.