close
Choose your channels

வரலட்சுமி படப்பிடிப்பில் விபத்து: வேடிக்கை பார்த்த தாயும் மகளும் பலி!

Saturday, March 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆக்சன் கிங் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா என்பவர் நாயகனாக நடித்து வரும் 'ரணம்' என்ற படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு அருகேவுள்ள பாகலூரு என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சி ஒன்று ஷெல் கேஸ் கம்பெனி அருகே நடைபெற்று வந்தபோது படப்பிடிப்பை பலர் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் ஒரு ஆக்சன் காட்சியில் காரை வெடிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ உருவாக்க வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தது சிதறியது. இந்த விபத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு பெண்ணும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெங்களூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பலியான இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.