close
Choose your channels

பள்ளி குழந்தைகளுக்கு வரலட்சுமி கொடுத்த இன்ப அதிர்ச்சி

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்று கூறுவதுண்டு. அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பள்ளிக்குழந்தைகளை சந்தோஷப்படுத்தி சந்தோஷம் அடைந்துள்ளார்.

நடிகை வரலட்சுமி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது பள்ளி குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தி அவர்கள் அனைவரையும் தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு காரிலேயே அழைத்து சென்றுள்ளார். அப்போதுதான் அந்த பள்ளி குழந்தைகள் தினமும் 7 கிமீ நடந்தே பள்ளிக்கு செல்வது அவருக்கு தெரிந்துள்ளது.

வரலட்சுமி தன்னுடைய காரில் குழந்தைகளை ஏற்றியவுடன் அவர்கள் அனைவரின் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து மனம் நெகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். வரலட்சுமியின் இந்த உதவியை சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.