close
Choose your channels

கொட்டும் மழையில் நடுரோட்டில் நடந்து செல்லும் விக்கி-நயன் ஜோடி..  குவியும் பாராட்டுக்கள்..!

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஹைதராபாத் சாலையில் நடந்து சென்ற வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தம்பதியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் தங்கள் இரட்டை குழந்தைகளின் பெயர்கள் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி உள்ளனர். இருவரும் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு தெருவோரம் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொட்டும் மழையில் கூட இந்த ஜோடியின் பெருந்தன்மையை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவின் 75வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் இந்த படத்தில் அவருடன் ஜெய், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சுதகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். நீல் கிருஷ்ணா இயக்கத்தில் தமன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.