close
Choose your channels

காதலர் தினத்தில் காதலரின் கைபிடித்த நயன்தாரா: வைரல் புகைப்படம்!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடி வரும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் காதலர் தினம் சிறப்பாக காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 5 ஆண்டுக்கு மேலாக காதலர்களாக இருந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் இன்று காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

பட்டு வேட்டி, பட்டு சட்டை காஸ்ட்யூமில் விக்னேஷ் சிவனும், பட்டு சேலையில் நயன்தாராவும் கொண்ட புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

’தங்கமே என்றும் நான் உன்னை காதலிப்பேன்’ என்றும், ’காதலர் தின வாழ்த்துக்கள் அன்பான நண்பர்களே’ என்றும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் கையை பிடித்துக்கொண்டு நயன்தாரா நிற்கும் போஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.