close
Choose your channels

கேரளா பாணியில் விஜய் செய்த நிவாரண உதவி

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் வழக்கம்போல் கோலிவுட் திரையுலகினர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். சிவகுமார் குடும்பம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ் உள்பட ஒருசிலர் நிவாரண நிதியை அளித்துள்ள நிலையில் தளபதி விஜய்யும் தனது வழக்கமான பாணியில் நிவாரண உதவியை தொடங்கிவிட்டார்.

தளபதி விஜய், டெல்டா பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.4.5 லட்சம் அனுப்பி, இந்த பணத்தில் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்றுதான் கேரள வெள்ளத்தின்போதும் கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு விஜய் பணம் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ரசிகர் மன்றத்தின் மூலம் நிதியுதவி செய்வதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி சேர்ந்து விடுகிறது என்பதால் மற்ற நடிகர்களும் இதே பாணியை பின்பற்றலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.