close
Choose your channels

மாவீரனுக்கு குரல் கொடுத்த விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கோலிவுட் ஆச்சரியம்..!

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் நாளே 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியால் படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில் இந்த படத்தின் அசரீரி குரல் கொடுத்த விஜய் சேதுபதி சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

’மாவீரன்’ திரைப்படத்தில் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் கேரக்டர் திடீரென தோன்றும் அசரீரி குரல் காரணமாக மாவீரனாக மாறி அநீதிகளை தட்டி கேட்கும் என்பதும் அந்த குரல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதி குரலை இயக்குனர் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.

படக்குழுவினர் எதிர்பார்த்தது போலவே விஜய் சேதுபதியின் குரல் வரும் இடங்கள் எல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி விஜய் சேதுபதி டப்பிங் பேசியதாகவும் ஆனால் அதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் விஜய் சேதுபதி, மடோன் அஸ்வினுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் தான் அவர் டப்பிங் பேசிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் இன்றைய பெரிய நட்சத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.