close
Choose your channels

அன்னையர் தினத்தில் விஷால் செய்த மகத்தான பணி

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்ட தினம் முதல் அவர் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி கஷ்டப்படும் பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை தனது சொந்த பணத்தின் மூலமும், டிரஸ்ட் மூலமும் செய்து வருகிறார். அவருடைய சமூக சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மே 8-ல் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த அன்னையர் தினத்தில் கீழ்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவுற்ற பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் உணவு அளித்தார். விஷாலுடன் மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன்,செயலாளர் ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்

விஷாலின் இந்த மகத்தான சேவை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.