close
Choose your channels

விஜய் தந்தையுடன் ரஜினி சந்திப்பா? பரபரப்பு தகவல்

Monday, March 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனியார் கல்லூரி ஒன்றில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கவுள்ளார். அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க சற்றுமுன் வந்த ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் ரஜினிகாந்த், எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மாஸ் பேச்சு இருக்கும் என்று அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதே விழாவில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். எனவே இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.