close
Choose your channels

காலில் கட்டுடன் யாஷிகாவின் சமீபத்திய புகைப்படம்....! ஆறுதல் கூறும் ரசிகர்கள்....!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவமனையில் காலில் கட்டுடன் யாஷிகா ஆனந்த் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

தன்னுடைய வசீகரிக்கும் நடிப்பு மூலமும், கவர்ச்சியான போட்டோஷூட்கள் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதற்குப்பின் தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இந்த நிலையில் யாஷிகா புதுச்சேரியில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு, சூளேரிக்காடுஅருகே காரில் அதிவேகமாகச் சென்றதில், கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் 2 ஆண் நண்பர்கள் பலத்த காயமடைந்தனர், அவருடைய நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்தில் 1 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் காலமானார். விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சமீபத்தில் தான் தோழியின் இறப்பு குறித்து யாஷிகாவிற்கு தெரிய வந்துள்ளது. பவானி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தன்னுடைய நிலை குறித்தும், "கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் என்னால் நடக்க முடியாது, ஓய்வெடுத்து வருகிறேன். இனி 5 மாதங்களுக்கு என்னால் நிற்கவும், நடக்கவும் முடியாது. படுக்கையிலே தான் இயற்கை உபாதைகள் எல்லாம். இடது புறமும், வலது புறமும் கூட திரும்ப முடியவில்லை. முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் எந்த அடியும் படவில்லை. கடவுள் என்னை தண்டித்துள்ளார். கட்டாயமாக இது எனக்கு மறுபிறவியே, ஆனால் நான் இழந்ததை ஒப்பிட்டுப்பார்த்தால், இது ஒன்றுமில்லை என தோன்றுகிறது" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

யாஷிகாவிற்கு காலில் பலத்த காயம் அடைந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யாஷிகா வலது காலில் கட்டுப்போட்டு, படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.