close
Choose your channels

முழுநேர குடும்பத் தலைவியாக மாறுகிறார் அனுஷ்கா

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் குணசேகர் இயக்கிய 'ருத்ரம்மாதேவி' ஆகிய படங்களில் சரித்திரகால நாயகியாகவும், சமீபத்தில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தில் வித்தியாசமான குண்டுப்பெண் கேரக்டரிலும் நடித்த அனுஷ்கா, விரைவில் தொடங்கவிருக்கும் 'சிங்கம் 3' படத்தில் முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக நடிக்கவுள்ளார்.


சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் சூர்யாவின் காதலியாகவும், சிங்கம் இரண்டாம் பாகத்தின் இறுதியில் சூர்யாவை திருமணம் செய்து கொண்டும் நடித்த அனுஷ்கா, மூன்றாவது பாகத்தில் சூர்யாவின் மனைவியாக, கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தலைவியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவின் பெரும்பாலான காஸ்ட்யூம் சேலை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த படத்தில் அனுஷ்கா விட்டுக்கொடுத்த கிளாமரை இந்த படத்தின் இன்னொரு ஹீரோயின் ஸ்ருதிஹாசன் கையிலெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.