close
Choose your channels

தலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் அவர் ஜாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கருணாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் கருணாஸ் எம்.எல்.ஏ தலைமறைவாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், தனது பேச்சு யார் மனதையாவது கஷ்டப்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.