close
Choose your channels

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சாரில் யுஏ' சான்றிதழ் பெற்று விட்டது. இதனையடுத்து இந்த படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக தயார் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'சரவெடி என்ற தலைப்பிலான தனது கதையை பயன்படுத்தி 'காப்பான்' படம் எடுத்துள்ளதாக குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு வரும் செப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்புபட்டுள்ளது. காப்பான்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.