close
Choose your channels

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: ரஞ்சித்துக்கு கருணாஸ் எச்சரிக்கை

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'சோழ மன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும்பாலானோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஒருசிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு குறித்து தஞ்சை மற்றும் மயிலாடுதுறை காவல்நிலையங்களில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும் திருபுவனம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ரஞ்சித்தை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை.

இவ்வாறு கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.