close
Choose your channels

தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரினே காரணம்: மீண்டும் பிரச்சனையை கிளப்பும் வனிதா

Wednesday, October 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தாலே பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும் என்பதே கடந்த 100 நாட்களின் பிக்பாஸ் வரலாறாக உள்ளது. முதல் முறை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்தபோது தினமும் அவரால் பிரச்சினைகளும் சண்டை சச்சரவு ஏற்பட்டது. அதன் பின் மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வனிதா வந்த போதும் சண்டை, சச்சரவுகளுக்கு குறைவே இல்லை. அதுமட்டுமின்றி சக போட்டியாளர் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இரு முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, இன்று மீண்டும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாக தனது வத்திக்குச்சி வேலையை ஆரம்பித்து, தர்ஷன் வெளியேறியதற்கு காரணம் ஷெரின் தான் என்று நான் சொன்னதை அப்போது யாரும் கேட்கவில்லை என்றும், இப்போதுதான் அது உண்மை என எல்லோருக்கும் தெரிகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதனை சாக்சி மறுத்து ’நீங்கள் சொல்வதால் உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது என்று கூறி ஷெரினுக்கு ஆதரவு அளிக்கின்றார். மேலும் வனிதாவின் பேச்சை கேட்ட ஷெரின் மனம் உடைந்து அழுகிறார். மொத்தத்தில் வனிதா வீட்டிற்குள் வந்ததால் இதுவரை கலகலப்பாக இருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை சச்சரவு மற்றும் சோகமாக மாறிவிட்டது' என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.